
TNPL 2022: Lyca Kovai Kings beat Ruby Trichy Warriors by 5 wickets (Image Source: Google)
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணியில் சீனியர் வீரரான முரளி விஜயை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் ஆட வந்துள்ள முரளி விஜய், இந்த டிஎன்பிஎல் சீசனில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அந்தவகையில், இந்த போட்டியில் திருச்சி அணியின் மற்ற வீரர்கள் சொதப்பிய போதிலும், அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் முரளி விஜய்.