
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 11, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 174 ரன்களைச் சேர்த்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 33.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.
2. மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், எதிர்வரும் யுபிடி20 லீக் தொடரில் விளையாட உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் தடைவிதித்துள்ளது. மேலும் யாஷ் தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர்.