
Top-5 Cricket News of the Day : ஆகஸ்ட் 2, 2025 அன்று கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இதில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தமாக 119.4 ஓவர்கள் வீசி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் அவர் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளதாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2. இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி 374 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தியதுடன் 118 ரன்களைச் சேர்த்தார். மேலும் ஆகாஷ் தீப் 66 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.