
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 5, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்சயம் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணி முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன.
2. ஆசிய கோப்பை தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான முதற்கட்ட ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், இப்ராஹிம் ஸத்ரான், முகமது நபி, குல்பதின் நைப், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், அல்லா கசான்ஃபர், நூர் அஹ்மத், நவீன் உல் ஹக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.