
ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். அதிலும் குறிப்பாக இந்த பட்டியலில் உள்ள மூன்று வீரர்கள் தற்போது இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. சுரேஷ் ரெய்னா
மிஸ்டர் ஐபிஎல் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் 5ஆம் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லையன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை எடுத்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு தனது கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடிய ரெய்னா 2022ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.