
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய கடைசி 5 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது கவுண்டி போட்டியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பல்வேறு வீரர்களின் ஆட்டம் மோசமாக அமைந்ததால் தற்போது அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சற்று கடுப்பாகி உள்ளார். மேலும் முதல் நாள் பயிற்சிக்கு பின்னர் இந்திய அணி வீரர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர் டீம் மீட்டிங்கில் தனது கருத்துக்களை காட்டமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயரை அவர் கடுமையாக விளாசியிருந்ததாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்த பயிற்சி போட்டியின் போது வீசப்பட்ட லென்த் பால்கள் மற்றும் ஷாட் பால்கள் என எதையுமே அவர் சரியாக விளையாடவில்லை.