
Tournament shown us you can't take any team lightly, admits Dravid ahead of Bangladesh challenge (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்திய அணி நாளை வங்காதேசத்துடன் மோதுகிறது. அதைத்தொடர்ந்து 6ஆம் தேதி ஜிம்பாப்வே உடன் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது பற்றி பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “பெர்த் ஆட்டம் ஏமாற்றமாக அமைந்தது. நாங்கள் நன்றாகப் போராடினோம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்... நாங்கள் சில தவறுகளும் செய்தோம், கொஞ்சம் வேறு மாதிரியான முடிவுகள் அமைந்திருக்கும்.