
மகளிருக்கான அண்டர்ன் 19 டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா அண்டர் 19 மகளிர் அணி, இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்டொனால்ட் 19 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் டிடஸ் சது, அர்ச்சணா தேவி, பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.