
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று இரவு தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் களமிறங்குவதன் மூலம் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணிக்காக சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகிய 3 பேர் மட்டுமே இதுவரை 500 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
இதுவரை விராட் கோலி 110 டெஸ்ட் போட்டிகளிலும், 274 ஒருநாள் போட்டிகளிலும், 115 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். இதனால் 500ஆவது போட்டியில் களமிறங்கும் விராட் கோலிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “இந்தப் போட்டி விராட் கோலியின் 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது தெரியாது. எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் நான் சிறந்தவன் இல்லை. விராட் கோலியின் இந்த சாதனை, இந்திய அணி வீரர்களுக்கே பெரும் ஊக்கத்தை அளிக்கும். அதேபோல் இந்திய மக்களுக்கும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.