Advertisement
Advertisement
Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 9ஆயிரம் ரன்களைக் கடந்தா 4ஆவது வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 19, 2024 • 09:05 AM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில்,  இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 19, 2024 • 09:05 AM

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Trending

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்து ஆட்டழிந்தது. இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் என விக்கெட்டி இழந்த்னர். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் விராட் கோலி 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இத்னால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சர்ஃபராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 53 ரன்களைச் சேர்த்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை பூர்த்தி செய்தார்.இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக  சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 2ஆவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 3ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement