
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை விளாசி இருக்கிறார் விராட் கோலி.
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என்று 80 சதங்களை அடித்துள்ளார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் சதம் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை விளாசிய போது யாராவது அவரின் சாதனையை முறியடிப்பார்கள் என்று நினைத்தோமா.. இதோ விராட் கோலி 80 சதங்களை விளாசி இருக்கிறார். அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 50 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலியை போன்ற வீரர்கள் முடியாதது என்று எதுவும் கிடையாது.