
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி மற்றும் கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடி வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரிலேயே ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.