
Virat Kohli led from the front for five years, enjoyed each and every moment under him: Rohit Sharma (Image Source: Google)
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக அதிரடி தொடக்க வீரரான ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து முழுநேர கேப்டனாக இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று எண்ணியே பிசிசிஐ அவருக்கு இந்த கேப்டன் பதவியை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தனக்கு முன்னால் அந்த பணியை கவனித்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து தற்போது ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.