
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து ஐபிஎல் அணியில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் தனது முதல் கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் ‘360 ஷோ’ யூடியூப் காணொளியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவுசெய்துள்ளது.
அதில் பேசிய விராட் கோலி, “களத்தில் நான் பேட் செய்யும்போது ரன் எடுக்க டிவில்லியர்ஸ் மற்றும் தோனியை அழைக்க வேண்டிய அவசியம் கூட எனக்கு தேவைப்படாது. ஏனெனில் எங்களுக்குள் அப்படியொரு புரிதல் இருக்கிறது. விக்கெட்டுகளுக்கு இடையே அதிவேகமாக ஓடுவதில் டிவில்லியர்ஸும், தோனியும் ஆகச் சிறந்தவர்கள். அது குறித்து கேட்க வேண்டியதே இல்லை.