
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 199 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களம்றங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - கேஎல் ராகுல் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 41.2 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்றியை போட்டியில் ஆஸ்திரேலிய அண்யின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆவது ஓவரின் 2ஆவது பந்தை மார்ஷ் அடித்தபோது, பந்தில் ஸ்லிப் திசையில் சீறிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலி டைவ் அடித்து பிடித்தார். மேலும் ஒரு கேட்ச் பிடித்தார்.