உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது - விராட் கோலி!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது - விராட் கோலி! (Image Source: Google)
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற விராட் கோலி மட்டும் தான் நடப்பு தொடரில் விளையாடுகிறார். இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏன் இவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறது என்பது குறித்து அவர் தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, “இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் எங்களுக்கு அளிக்கும் எல்லையற்ற ஆதரவு தான். கிரிக்கெட் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு தான் எங்களை உழைக்க வைக்கிறது.2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நாம் பெற்ற வெற்றி இன்னும் நமது மனதை விட்டு நீங்கவில்லை.
தற்போது புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த உலகக் கோப்பையிலும் நான் இடம்பெற்றது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களின் கனவுகளை மெய்ப்படுத்துவதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News