
கிட்டத்தட்ட ஆயிரம் நாட்களாக தனது ஃபார்மை இழந்து தவித்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, அவ்வபோது அரை சதங்களை அடித்து வந்தாலும் சதம் அடிக்க முடியாமல் திணறினார். தனது 70ஆவது சதத்தை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடித்திருந்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது 71 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆசிய கோப்பை தொடருக்கு ஒரு மாதம் முன்பு விராட் கோலிக்கு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர், தொடர்ந்து இருக்கமான மனநிலையில் இருந்து வந்ததாக வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டார். ஓய்விற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய அவர், ஆசிய தொப்பை தொடரின் 5 போட்டிகளில் 276 ரன்கள் அடித்தார். இவரது சராசரி 92. ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 150. அதே மனநிலையுடன்
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலும் விளையாடினார். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியில் 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இது ‘விராட் கோலி 2.0’ என்று பலராலும் அழைக்கப்பட்டு வருகிறது. விராட் கோலி எவ்வாறு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார்? எது அவருக்கு உதவிகரமாக இருந்தது? என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஆர் ஸ்ரீதர் பேட்டியுளித்துள்ளார்.