
இந்திய அணியின் நட்சத்திர வீரராக தகிழும் விராட் கோலி 2021 ஆம் ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை 1-2 என இந்திய அணி இழந்ததும் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டு விலகினார். இதற்கு முன்பாகவே டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை நீக்கியது.
வெள்ளைப்பந்துக்கு ஒரு கேப்டன் சிவப்புப்பந்துக்கு ஒரு கேப்டன் என்பது சரி வரும். ஆனால் இரண்டுக்கும் ஒரே கேப்டன் இருப்பது சரிவராது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் காரணம் கூறியது. இந்தப் பிரச்சனைகளுக்குப் பின்னால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியும்தான் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்து வெளியேற்றினார்கள் என்று இன்றுவரை நம்பப்படுகிறது.
தற்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து பட்டத்தை இழந்திருக்கிறது. இதற்கு அடுத்து விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக வரவேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடம் பெரியதாக இருக்கிறது.