
virat-kohli-wanted-to-remove-rohit-sharma-from-the-vice-captaincy (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி நேற்று டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு மிக முக்கிய காரணமாக ரோகித் சர்மா என்றே கூறலாம். ஐபிஎல் தொடரில் கோலியை விட ரோகித் சர்மா சிறப்பான கேப்டன்சியை செய்வதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வழுத்துவந்தன. எனவே கோலி தற்போது பதவி விலகியுள்ளதால், அவருக்கு அடுத்தபடியாக 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.