Advertisement
Advertisement
Advertisement

ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு! 

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய அக்ஸர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 16, 2023 • 13:08 PM
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு! 
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!  (Image Source: Google)
Advertisement

இந்திய அணி நேற்று வங்கதேச அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. ஆசியக் கோப்பையில் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

இந்த காரணத்தால் நேற்றைய தோல்வி இந்திய அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனாலும் கூட உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு இருக்கின்ற வீரர்களை வைத்து விளையாடிய காரணத்தினால், அவர்களுடைய பேட்டிங் அணுகுமுறை குறித்த கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.

Trending


நேற்றைய போட்டியில் இந்திய அணியில் பேட்டிங் நீளம் ஒன்பதாவது இடம் வரை இருந்தது. அவ்வளவு நீளமாக இருந்தும் 265 ரன்களை வெற்றிகரமாக இந்தியாவால் துரத்த முடியவில்லை என்பது கவலையான விஷயமே.

நேற்றைய போட்டியில் மேல் வரிசையில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 121 ரன்கள் அடித்து, இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்து கொண்டே இருந்தார். இவர் மேல் வரிசையில் சரியாக விளையாடாமல் இருந்திருந்தால், இந்த ரன்களுக்கு வாய்ப்பு மிகக்குறைவு.

அதே சமயத்தில் பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் வந்த அக்சர் படேல் முக்கியமான கட்டத்தில் 34 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். வெற்றிக்கு அணியை மிக அருகில் அழைத்து வந்த அவர், எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க இந்திய அணியின் வெற்றி பறிபோனது. ஆனாலும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.

நேற்றைய போட்டியில் விளையாடும் பொழுது அவருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது. கையில் பந்து அடித்து இருந்தது. இப்படி போட்டியில் அவருக்கு காயங்கள் உண்டாகிக்கொண்டே இருந்தது. இந்த காரணத்தினால் அவர் ஆசியக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இருந்து மட்டும் விலக்கி வைக்கப்படுகிறார். 

இந்நிலையில் அவரது இடத்திற்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற்வாரா எந்த சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கெனவே குல்தீப், ரவீந்திர ஜடேஜ இருப்பதால் இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் உள்ளது.

இதுவரை பதினாறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர் 16 விக்கெட்டுகளும், 233 ரன்களும் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement