
டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக அக்டோபர் ஐந்தாம் தேதி இந்திய அணி வீரர்கள் பெர்த் நகரில் வந்து அடைந்தனர். அங்கு டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் முகாமிட்டு இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்திருப்பது தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் உள்ள அறைக்கு வந்து தங்களது உடைமைகளை வைத்துள்ளனர். அப்போது மைதானத்தில் ஏராளமான குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை இந்திய வீரர்கள் பார்த்துள்ளனர்.அப்போது துருசில் செளகான் என்ற 11 வயது சிறுவன் மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
முதலில் அந்த சிறுவனை ரோகித் சர்மா தான் பார்த்துள்ளார். அந்த சிறுவன் தனது வயதையும் மீறி அதிவேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார். குறிப்பாக இன்சுவிங் யாக்கர்களை சிறுவயதில் கற்றுக்கொண்டு அசத்திருக்கிறார். இதனைப் பார்த்து ரோகித் சர்மா அந்த சிறுவனை அழைத்து பாராட்டி இருக்கிறார்.