
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இதுவரை 24 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற சுவாரஸ்யத்திற்கு பஞ்சாமில்லாம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறுகிறது.
அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அதிரடி வீரர் வில் ஜேக்ஸிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இப்போட்டியின் முதல் ஓவரில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிக்காட்டினர். இதனால் இன்னிங்ஸின் மூன்ராவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். அந்த ஓவரை அடித்து விளையாட முயற்சி செய்த விராட் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.