
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது சிராஜ் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே இடையேயான போட்டியானது நாளுக்கு நாள் ஆக்ஷோரமாக மாறி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இருந்தே இருவாரும் களத்தில் மோதிக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்தவகையில், தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் சிராஜ் மற்றும் லபுஷாக்னேவின் மோதலானது தொடர்ந்தது. அதன்படி இப்போட்டியின் 33ஆவது ஓவரை சிராஜ் வீசிய நிலையில் அதனை லபுஷாக்னே எதிர்கொண்டார். அப்போது முகமது சிராஜ் மைண்ட் கேம்களை விளையாடி லாபுஷாக்னேவை பயமுறுத்த முயன்றார்.
அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீசிய பிறகு, சிராஜ் நேராக ஸ்ட்ரைக்கரின் முனைக்குச் சென்று ஸ்டம்புகளின் மேல் வைக்கப்பட்டிருந்த பையில்களை மாற்றினார். இதைப் பார்த்த லாபுஷாக்னேவும் சிராஜ் அந்த இடத்தை விட்டு சென்றது பைல்களை மீண்டும் மாற்றினார். இச்சம்பவத்தை கண்ட ரசிகர்களும் சிரிப்பலையில் அழ்ந்தனர். ஆனால் இறுதியில் சிராஜின் இந்த மைன்ட் கேமில் லபுஷாக்னே சிக்கிக் கொண்டார்.