
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமாக தொடங்கிய நிலையில் 13 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேரள அணிக்கு சஞ்சு சாம்சன் - ரொஹன் குன்னுமொல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து குன்னுமொல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சல்மான் நிஸாரும் அதிரடியாக விளையாடி 34 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அப்துல் பசித் 23 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் கேரள அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கோவா அணியில் இஷான் கடேகர் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.