
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போது ஒரு ஓவரில் தொடர்ந்து அத்தனை பந்துகளையும் பவுண்ட்ரி எல்லையை தாண்டி சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
அந்த போட்டியின் இறுதியில் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்தியா 20 ஓவர்களில் 218 ரன்களை எடுக்க உதவினார். இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இடது கை பேட்டர் யுவராஜ் 2007 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியிலும் முக்கியப் பங்காற்றினார். இறுதியில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
Couldn’t have found a better partner to watch this together with after 15 years #15YearsOfSixSixes #ThisDayThatYear #Throwback #MotivationalMonday #GetUpAndDoItAgain #SixSixes #OnThisDay pic.twitter.com/jlU3RR0TmQ
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 19, 2022