
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் தூபே மூலமாக இந்திய அணி மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை கண்டறிந்துள்ளது. 3 டி20 போட்டிகளில் விளையாடி 124 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதோடு, தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பையில் ஷிவம் தூபே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
கிட்டத்தட்ட மினி யுவராஜ் சிங் போல் பேட்டிங் ஸ்டைலை கொண்டுள்ள ஷிவம் தூபே, ஸ்பின்னர்களை வெளுப்பதில் கில்லியாக இருக்கிறார். பந்து சிறியளவில் வேகம் குறைவாக வந்தாலும், நிச்சயம் சிக்சருக்கு பறக்கிறது. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஷிவம் தூபேவை பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் ஷிவம் தூபேவின் எழுச்சி குறித்து இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர். பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் பங்களிக்க கூடிய வீரர். அதேபோல் ஷிவம் தூபே மாறி வருகிறார். ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும்.