
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது முன்னணி வீரராக விளையாடி வருகிறார். அவரோடு இணைந்து விராட் கோலியும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த இரண்டு வீரர்களுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் அசைக்க முடியாத வீரர்களாக இருந்து வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து 67 இன்னிங்ஸ்களில் 3,973 ரன்களை 63 ரன்கள் என்கிற சராசரி உடன் குவித்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் 14 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.
ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 5,150 ரன்களையும், ஹசீம் அம்லா மற்றும் டீகாக் ஆகியோர் 4300 ரன்களையும் குவித்துள்ள வேளையில் அவர்களுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய ஜோடி தான் அதிக ரன்கள் அடித்துள்ளது.