
இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான ஒரு வெற்றியை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கில் இருவரும் 142 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு தந்தார்கள். இதற்கடுத்து இந்திய அணி திடீரென 185 ரன்கள் விக்கெட்டுகள் என்று சிறிதாக நெருக்கடிக்கு வந்தது. இந்த நேரத்தில் கேஎல் ராகுல் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.
இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கேஎல்ராகுல், “கேப்டன் பதவி என்பது, இது எனக்கு முதல் முறை நடப்பது கிடையாது. இதற்கு நான் பழகி விட்டேன். நான் அதை விரும்புகிறேன். கொழும்புவிற்கு பிறகு இங்கு ஆரம்பத்தில் சொர்க்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. இது கடினமானது. உடல் ரீதியாக சவால் ஆனது.