
தற்போது இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட தலை சிறந்த அணியாக திகழ்கிறது. தற்பொழுது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் எழுச்சி அடைந்த அணிகளாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. காரணம் அவர்களிடம் பேட்டிங் வரிசை மிக நீளமாக இருக்கிறது.
மேலும் அவர்களிடம் சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் விளையாடக்கூடிய பிளாஸ்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களாலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்காலத்தில் அபாயகரமான அணிகளாக தெரிகிறார்கள். குறிப்பாக மிக நீண்ட உலக கோப்பை தொடர்களில் இவர்கள் ஆபத்தான அணிகள்.
இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் பிளாஸ்டர்களாக இருப்பது சூரியகுமார் யாதவ் மட்டும்தான். மற்ற அனைவரும் ஒரே கியரில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களாக இருந்து வருகிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, கேஎல் ராகுல் இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பேட்மேன்கள்.