-mdl.jpg)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி இன்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாய கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 66 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 43 ஓவர்களில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், "இந்தத் தொடரின் சிறப்பான செயல்பாட்டை கடைசிப் போட்டியில் கொடுப்பதற்காகக் காத்திருந்தோம் போல. முக்கியமான போட்டிகளில் அணியின் முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். சேஸிங்கிற்கு கொஞ்சம் ஏதுவாக சூழல் இருந்தது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அதற்கேற்றவாறு வீரர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள்.