Advertisement
Advertisement
Advertisement

உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!

அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 23, 2023 • 11:41 AM
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும் அபாரமாக விளையாடிய அந்த அணி 3 – 2 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது.

அந்த வகையில் 2022 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்தை தெறிக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் அடுத்த வருடம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை உலக அணிகளுக்கு காண்பித்தது. முன்னதாக இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட தேர்வாகி முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது என்று கம்பேக் கொடுத்தார்.

Trending


இந்நிலையில் அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ரஸல் தெரிவித்துள்ளார். குறிப்பாக காட்டுத்தனமாக சிக்சர்களை அடிக்க உடலை மெருகேற்றி வருவதாக தெரிவிக்கும் அவர் அடுத்த வருடம் தாம் பார்ப்பதற்கு ஃபைட்டர் போல இருப்பேன் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையாக நான் இன்னும் நல்ல வடிவத்தில் இருப்பேன். குறிப்பாக பார்ப்பதற்கு நான் யுஎஃப்சி ஃபைட்டர் போல இருப்பேன். இந்த வெற்றி எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அது இன்னும் பயிற்சிகளை எடுப்பதற்கு உத்வேகத்தை கொடுக்கிறது. அதற்கு முன்பாக இன்னும் நிறைய கிரிக்கெட்டில் விளையாட உள்ளது நல்லதாகும்.

பொதுவாக நீங்கள் கிரிக்கெட்டில் விளையாடி போட்டியிடும் போது உங்களுடைய உடல் ஆக்டிவாக இருக்கும். அதே சமயம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்க முடியாது. எனவே கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு உலகக்கோப்பைக்காக நாங்கள் தயாராக உள்ளோம். நான் கரீபியன் ரசிகர்களையும் அவர்களின் ஆர்வத்தையும் விரும்புகிறேன்.

நாங்கள் சுமாராக செயல்படும் போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த சமயத்தில் நான் நிறைய இளநீர் குடித்து மசாஜ் செய்து பயிற்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதை செய்து தான் கடந்த போட்டியில் நான் 3 ஓவரில் 30 ரன்களை கொடுத்தேன். இந்த போட்டியில் எங்களுடைய அனைத்து பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement