Advertisement

கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ! 

கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பேட்டியளித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 03, 2023 • 12:08 PM
What Happened Between Virat Kohli After Rcb Vs Lsg Clash
What Happened Between Virat Kohli After Rcb Vs Lsg Clash (Image Source: Google)
Advertisement

கடந்த இரண்டு நாட்களாக விராட் கோலி மற்றும் காம்பீர் இடையேயான வாக்குவாதம்தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். நேற்று முழுவதும் என்னதான்யா பிரச்சனை..? எதுக்குய்யா இப்படி சண்டை போட்டீங்க..? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கையா என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

லக்னோ அணியை சேர்ந்த நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையேயான மோதலானது இரண்டாவது இன்னிங்ஸின் 16ஆவது ஓவரில் இருந்து தொடங்கியது. 17ஆவது ஓவரின் முடியும்போது கோலி பிட்சில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நவீன் இதுகுறித்து நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, நவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அமித் மிஸ்ரா தடுத்தாக கூறப்படுகிறது.

Trending


போட்டி முடிந்த பிறகு, நவீன் மற்றும் விராட் இருவரும் கைகுலுக்கும்போது மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதன்பிறகு, லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய நவீனை அழைத்தார். ஆனால், நவீன் கோலியுடன் பேச மறுத்து அங்கிருந்து சென்று விட்டார். அந்த வீடியோவும் இணையத்தில் பரவி வைரலானது. 

தொடர்ந்து, வாக்குவாதம் குறித்து மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸ் மற்றும் விராட் கோலி பேசிகொண்டு இருந்தனர். அப்போது மேயர்ஸ் கோலியிடம், “ ஏன் தொடர்ச்சியாக எங்கள் அணி வீரர்களிடம் தவறாக நடந்து கொள்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு விராட் கோலி, “ நவீன்தான் என்னை பார்த்து முறைத்து கொண்டிருந்தார்” என தெரிவித்தார். 

அந்த நேரத்தில் டக் அவுட்டிலிருந்த காம்பீர் விறுவிறுவென வந்து மேயர்ஸிடம் பேசாதே என இழுத்து சென்றார். அதன்பிற்கு காம்பீர் மற்றும் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பேட்டியளித்தார். 

இதில் விராட் கோலி திட்டியவுடன் கம்பீர் அவரிடம் இப்போது நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என கோபமாக கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி நான் உங்களை எதுவும் சொல்லவில்லை நீங்கள் ஏன் நடுவில் வருகிறீர்கள் என பதில் அளித்துள்ளார். இதற்கு ,  நீ என் அணி வீரர்களை திட்டினால் அது என் குடும்பத்தை திட்டியதற்கு சமம் என்று  கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என பதில் அளித்துள்ளார்.

விராட் கோலியின் இந்த பதிலால் கடுப்பான கௌதம் கம்பீர் குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டுமா? என கம்பீர் கோபமாக பேசி உள்ளார். அதற்குள் சக அணி வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இதன் காரணமாக இருவருக்கும் தங்கள் போட்டியின் ஊதியத்திலிருந்து 100% அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement