Advertisement
Advertisement
Advertisement

நான் இந்த பவுலரைத் தான் டார்கெட் செய்தேன் - விராட் கோலி ஓபன் டாக்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரைசதம் அடித்தது குறித்து இந்திய வீரர் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 26, 2022 • 11:43 AM
'When Surya started hitting like that, I looked at the dugout. Rohit and Rahul bhai told me...': Koh
'When Surya started hitting like that, I looked at the dugout. Rohit and Rahul bhai told me...': Koh (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 52 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து பிஞ்ச் 7 , ஸ்டீவன் ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6 ஆகியோர் சொதப்பிய நிலையில் அடுத்து இங்லீஸ் 24, டிம் டேவிட் 54, டேனியல் சாம்ஸ் 28 ஆகியோர் சிறப்பாக விளையாடியால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.

Trending


இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேஎல்ராகுல் 1, ரோஹித் ஷர்மா 17 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விராட் கோலி 63, சூர்யகுமார் யாதவ் 69 , ஹார்திக் பாண்டியா 25 ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக கடைசி ஓவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் முதல் பந்தில் கோலி சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தப் பிறகு தினேஷ் கார்த்திக் ஒரு சிங்கில் எடுத்தார். 

தொடர்ந்து ஹார்திக் பாண்டியா ஒரு பவுண்டரியை அடித்ததால் இந்தியா 19.5 ஓவர்களில் 187/4 ரன்களை சேரத்து, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய கோலி, “நான் ஸாம்பாவைத்தான் டார்கெட் செய்தேன். அவர் மிகச்சிறந்த பௌலர். அவரை அட்டாக் செய்தால் மட்டுமே, மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட முடியும் என நினைத்தேன். அதேபோல் செய்தேன். சூர்யகுமார் யாதவ் ஒருபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தார். அப்போது பெவிலியனில் இருந்த ரோஹித் சர்மா, ‘நீங்கள் நிதானமாக விளையாடுங்கள். சூர்யகுமார் அடிக்கட்டும்’ எனக் கூறினார். அதேபோல் செய்தேன். சூர்யகுமார் விளையாடுவதை பார்த்து, பந்துகள் எப்படி வருகிறது, எப்படி அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்.

சூர்யகுமார் யாதவ் கடந்த 6 மாதங்களாகவே மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். நாங்கள் கடைசி ஓவரில் 4,5 ரன்களைத்தான் சேஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கில் விளையாடினோம். ஆனால், 11 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. இதனால், முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்துவிட வேண்டும் என முடிவு செய்துதான் அடித்தேன். அணிக்காக பங்களிப்பு செய்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement