Advertisement
Advertisement

ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்!

தன்னை விமர்சித்த ரசிகரை தாக்க முயன்றதாக காணொளி வெளியாக வைரலான நிலையில், அதற்கான விளக்கத்தை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 18, 2024 • 20:09 PM
ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்!
ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்! (Image Source: Google)
Advertisement

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் லீக் சுற்றுடனே தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்சமயம் லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Trending


அதிலும் குறிப்பாக அந்த அணி அமெரிக்காவிற்கு எதிரான தங்களுடைய முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்ததே இந்நிலைக்கு காரணமாக கருதப்படுகிறது. இதனால் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று அது ஒரு படி மேல் சென்று தன்னை விமர்சித்த ரசிகரை வீரர் ஒருவர் தாக்கும் அளவிற்கு சென்றுள்ளது. 

அதன்படி, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தனது மனைவியுடன் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு இருந்த ரசிகர் ஒருவர் ஹரிஸ் ராஃவுப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராவுஃப், அந்த நபரை தாக்க முற்பட்டார். ஹாரிஸ் ராவுஃபின் மனைவி அவரை தடுக்க முயற்சித்தும், ராவுஃப்அந்த நபரிடம் சென்று வார்த்தை மோதலில் ஈடுப்பட்டார். இது தொடர்பான காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலானது. 

 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய ஹாரிஸ் ராவுஃப், “இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன், ஆனால் இப்போது அந்த காணொளி வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு.

 

இருப்பினும் கூட, எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, ​​அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹாரிஸ் ராவுஃபின் சமூக வலைதள பதிவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement