Advertisement

சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் பதிவுசெய்துள்ளார்.

Advertisement
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி!
சேனா நாடுகளில் அதிக அரைசதம்; ரோஹித்தின் சாதனையை முறியடித்த யஷஸ்வி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 02, 2025 • 10:33 PM

Yashasvi Jaiswal Record: பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களை எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்ததுடன், மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 02, 2025 • 10:33 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் கேல் ராகுல் 2 ரன்னிலும், கருண் நயர் 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி சேனா நாடுகளில் தொடக்க வீரராக அதிக அரைசதங்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். முன்னதாக ரோறித் சர்மா 4 அரைசதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 முறை அரைசதம் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர்த்து பர்மிங்ஹாமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் எனும் பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்லார். முன்னதாக கடந்த 1974ஆம் ஆண்டு சுதிர் நாயக் 77 ரன்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில் தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வல் 87 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

பர்மிங்காம் டெஸ்டில் இந்திய தொடக்க வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள்

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 87 ரன்கள் (2025)
  • சுதிர் நாயக் - 77 ரன்கள் (1974)
  • சுனில் கவாஸ்கர் - 68 ரன்கள் (1979)
  • சேதேஷ்வர் புஜாரா - 66 ரன்கள் (2022)
  • சுனில் கவாஸ்கர் - 61 ரன்கள் (1979)

அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடிக்கும் 7ஆவது 50+ ஸ்கோராக இது அமைந்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோரை பதிவுசெய்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய தொடக்க வீரர்கள் அதிக முறை 50+ ரன்கள் எடுத்தவர்

  • சுனில் கவாஸ்கர் - 20 முறை (66 இன்னிங்ஸ்)
  • ரோஹித் சர்மா - 8 முறை (24 இன்னிங்ஸ்)
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 7 முறை (12 இன்னிங்ஸ்)*
  • மோட்டகனஹள்ளி ஜெயசிங்க - 6 முறை (14 இன்னிங்ஸ்)
Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement