
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்தவகையில் இந்த தொடரில், இளம் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், இங்கிலாந்து தலைமை பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடைய சாதனைகளை தகர்த்து புதிய சாதனையை படைக்க முடியும். மேற்கொண்டு இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரரான பதும் நிஷங்காவையும் ஜெய்ஸ்வால் பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் அதிக ரன்கள்