
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இப்போட்டிகான இந்திய அணியில் ராஜத் பட்டிதாரும், இங்கிலாந்து அணியில் சோயப் பஷீரும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களிலும், ஷுப்மன் கில் 34 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Indian openers to score multiple Test centuries at age of 22 or less:
— Bharath Seervi (@SeerviBharath) February 2, 2024
4 - Sunil Gavaskar
2 - Yashasvi Jaiswal #INDvsENGTest pic.twitter.com/6T51UteKh8