இனி தனை செய்தால் மட்டுமே அணியில் இடம் - பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் சீனியர் வீரர்கள்!
இனி யோயோ தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அணிக்குள் நுழைய முடியும் என பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yo-Yo Test And Dexa Will Now Be Part Of Selection Criteria, Says BCCI Post-Indian Team Review Meetin (Image Source: Google)
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியில் தழுவியது.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிக்கடி காயம் ஏற்படும் வீரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் சீனியர் வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பும்ரா, முகமது சமி போன்ற வீரர்கள் டெஸ்ட் அணியில் முக்கிய பங்கு ஆற்ற கூடியவர்கள்.
இவர்கள் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால், அடுத்த ஒரு வாரத்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஜொலிக்க இயலாது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தொடர்ந்து 14 போட்டிகளிலும் விளையாடாமல் முக்கியத்துவம் இல்லாத ஆட்டத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஐபிஎல் போட்டியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி உடல் தகுதியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேபோன்று இனி இந்திய கிரிக்கெட் அணியில் தகுதி பெற வேண்டும் என்றால் யோயோ உடல் தகுதி டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. யோ யோ டெஸ்டில் தோல்வி அடையும் வீரர்களுக்கு இனி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இல்லை என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு சீனியர் வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இந்திய அணிக்கு திரும்புவது சிக்கலாக உள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News