
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு விராட் கோலி பெரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவரின் பேட்டிங்கிலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில போட்டிகளாக கோலியின் கம்பேக் அசரவைத்துள்ளது.
குறிப்பாக டி20 தொடரில் முதல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கோலி குறைந்த ஸ்கோருக்கு அவுட்டாகி வெளியேறினார். ஆனால் 2ஆவது போட்டியில் பழைய விண்டேஜ் கோலியை நம்மால் பார்க்க முடிந்தது. மீண்டும் அதே கிளாசிக் ஷாட்களால் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் திரும்பி வந்துட்டேனு சொல்லு என்பது போல கோலியின் ஃபார்ம் இருக்கிறது.
இந்நிலையில் அதற்காக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், “விராட், நீ கிரிக்கெட்டில் எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் சேர்ந்து பயணித்த அந்த பொடிப்பையன் கோலி இன்று புதிய தலைமுறையையே வழிநடத்தும் ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறாய்.