Advertisement

கேப்டன் கோலி குறித்து வைரலாகும் ரெய்னாவின் கருத்து!

இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 13, 2021 • 09:54 AM
youre-talking-about-an-icc-trophy-but-he-hasnt-even-won-an-ipl-yet-suresh-raina-on-virat-kohlis-capt
youre-talking-about-an-icc-trophy-but-he-hasnt-even-won-an-ipl-yet-suresh-raina-on-virat-kohlis-capt (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியிடன் படுதோல்வியைச் சந்தித்து கோப்பையை இழந்தது. இதையடுத்து விராட் கோலியின் கேப்டன் திறன் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகிறது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

உண்மையில் விராட் கோலியால் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் திறம்பட வழிநடத்த முடிகிறதா? என்பதே பல கிரிக்கெட் ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்வி. தோனி போன்ற கேப்டனால் கூட டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று வடிவ கிரிக்கெட்டின் சுமையை சுமக்க முடியவில்லை எனும் போது, விராட் கோலி சட்டேன எடுக்கும் முடிவுகளுக்கு சில ஃபார்மட் கிரிக்கெட் ஒத்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Trending


குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், கோலியை விட மிகச் சிறப்பாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் செயல்பட்டார் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனால், அவரது கேப்டன்சி குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா, விராட் கோலி கேப்டன்ஷிப் மீதான தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா " விராட் கோலி நம்பர் 1 கேப்டனாக இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார் என்பதை அவரது சாதனைகள் நிரூபிக்கின்றன. அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவர் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்று பேசுகிறீர்கள். ஆனால் அவர் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை. அவருக்கு மேலும் சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பேட்டிங்கில் ஏற்பட்ட பின்னடைவே காரணம். அணியின் முக்கிய வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை காப்பாற்றியிருக்க வேண்டும். அந்த பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். நம்மிடம் ஏற்கனவே 1983 உலகக் கோப்பை, 2007 டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை உள்ளது. 

வீரர்கள் கடுமையாக பயிற்சி பெறுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கோலிக்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். விராட் கோலி போட்டியின் சூழலையே தனது பேட்டிங்கால் மாற்றும் திறன் படைத்தவர். எனினும், அடுத்த 12 முதல் 16 மாதங்களுக்குள் இந்திய அணி நிச்சயம் ஐ.சி.சி கோப்பையை கையில் ஏந்தும் என நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement