Aditya thakare
ரஞ்சி கோப்பை 2025: விதர்பாவின் படுதோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இத்தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 122 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய டேனிஷ் மாலேவார் 75 ரன்களையும், ஹர்ஷ் தூபே 69 ரன்களையும் சேர்த்து அணியை சரிலிருந்து மீட்டனர். இதன்மூலம், விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், விஜய் சங்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Aditya thakare
-
ரஞ்சி கோப்பை 2025: யாஷ் ரத்தோட் அரைசதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கலிறுதி ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 297 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விதர்பா 353 ரன்களில் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் தமிழ்நாடு!
விதர்பா அணிக்கு எதிரான கலிறுதி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47