Icc t20 world cup 2022
ஐபிஎல் குறித்த கேள்வியால் திகைத்து நின்ற பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதி மோதலில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி கடந்த 2009ஆம் ஆண்டும் இங்கிலாந்து அணி 2010ஆம் ஆண்டும் கடைசியாக டி20 உலகக்கோப்பையை வென்றன. எனவே இரு அணிகளுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் கோப்பை வெல்ல முயற்சித்து வருகின்றன. இதனால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.