Ipl 2022 mega auction
மார்ச் இறுதியில் ஐபிஎல்? வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனை எங்கு நடத்துவது, பார்வையாளர்களை அனுமதிக்கலாமா போன்ற விஷயங்கள் குறித்து, இன்று மொத்தம் 10 அணிகளுடன் காணொலி காட்சி மூலம் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.
அப்போது ஐபிஎல் அணிகளுக்கான ஏல நடைமுறை, விதிகளை துவக்கத்திலேயே பிசிசிஐ விளக்கியது. மேலும் மெகா ஏலம் பிப்ரவரி 12 அல்லது 13-ல் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெளிவாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கொரோனா சூழலைப் பொறுத்து இறுதித் தேதி மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.