Advertisement
Advertisement

Ipl 2023

IPL 2023: BCCI will plant 42,000 trees as a part of the new initiative!
Image Source: Google

ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!

By Bharathi Kannan May 24, 2023 • 14:28 PM View: 322

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்த நிலையில், குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதனால் குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலை போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்காத பந்துகளை 0 அல்லது நேரான கோடு அல்லது காலி கட்டமாக தான் காட்டுவார்கள். ஆனால் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய சேனல்களில் சென்னை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்காத பந்துகளில் வழக்கம் போல 0 காட்டுவதற்கு பதிலாக சிறிய அளவிலான பச்சை மரங்கள் காட்டப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

Related Cricket News on Ipl 2023