Soumya sarkar
மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வங்கதேசம் - இலங்கை போட்டியில் பரபரப்பு!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 37 ரன்களையும், குசால் மெண்டிஸ் 36 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின், மெஹிதி, முஸ்தஃபிசூர், சௌமியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.