The congress
அரசியல் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆந்திராவைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர், அதன் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பத்தி ராயுடு 19 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியனானது.
இந்த தொடருடன் அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 204 போட்டிகளில் விளையாடி 4332 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஒரு சதமும், 22 அரைசதமும் அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அம்பதி ராயுடு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்று கூறப்பட்டது.
Related Cricket News on The congress
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24