The srh
நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
மேலும் இப்போட்டியை நேரில் சென்று பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஒரு கட்டத்திற்கு மேல் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் விட்ட காட்சிகள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறைக்கு சென்ற காவ்யா மாறன், தங்கள் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Cricket News on The srh
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24