Wtc 2021
ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரஹானே உஷாராக இருக்க வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து இந்திய அணி, 149 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையிலிருந்து, 217 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார். கோலியும் ரஹானேவும் ஆடியவரை இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் கோலி 44 ரன்னிலும், ரஹானே 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்து, 217 ரன்களுக்கு சுருண்டது.