Wtc 2021
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை மாற்ற கவாஸ்கர் ஆலோசனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முழுவதும் அங்கு பெய்த மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே முடிவுக்கு வந்தது. மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருவதால் இனிவரும் நாட்களிலும் போட்டி சரியான முறையில் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 6 பேட்ஸ்மேன்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என பிளேயிங் லெவனை இந்திய அணி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் இந்த மழை காரணமாக மைதானம் மிகவும் மந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த போட்டியில் ஸ்பின் பவுலிங்க்கு ஆடுகளம் ஒத்துழைப்பு தராது என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.