தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்சமாயம் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி விலகுவதாக அறிவித்து அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். முன்னதாக இந்தாண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜேசன் கில்லெஸ்பியை டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. 

Advertisement

ஆனால் அதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.  அனால் அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து நடந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் அந்த அணி மீது மீண்டும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. இதனால் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தற்காலிக பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டார். அதேசமயம் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கில்லெஸ்பி தொடர்வார் என்பதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்திருந்தது. இந்நிலையில் தான் ஜேசன் கில்லெஸ்பி தனது பதியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராகா செயல்பட்டு வந்த கேரி கிறிஸ்டன் தனது ராஜிநாமாவை அறிவித்த நிலையில், தற்போது டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியும் தனவு ராஜிநாமாவை அறிவித்துள்ளது மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைகளால் இவர்கள் விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஜேசன் கில்லெஸ்பி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேதை நியமித்துள்ளது. இதன்மூலம் எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆகிப் ஜாவேத் டெஸ்ட் அணியின் தற்காலிக பயிற்சியாளராகவும் தனது பணியை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News